ஓம் நமச்சிவாய

ஓம் நமச்சிவாய

Wednesday 13 July 2016

மனம்.



       

நமக்குள் இருக்கும் அற்புத ஆற்றல்களை அடைய முடியாமல் தடுக்கும் சுவர்தான் மனம். ஐயா நான் கேட்டது நீங்க நம்பறீங்களா என்றுதானே ஒழிய அழிய போவதாக நான் சொல்லவில்லை. இந்த உலகம் நிச்சயம் சுமார் 400 கோடி ஆண்டுகளுக்கு பிறகுதான் அழியும். சில விடயங்களை நாம் நேரடியாக உங்களுக்கு கூற இயலாது. சில இரகசியங்களை தாங்கும் மனோதிடம் அனைவருக்கும் வாய்ப்பதில்லை. இன்னும் உங்களின் பல லட்சம் தலைமுறை இப்பிரபஞ்சத்தில் வாழும் இது சத்தியம். 

சூரியனில் இருந்து வெடித்து சிதறிய கிரகங்கள் மெல்ல மெல்ல சூரியனை நோக்கி ஈர்க்கபட்டு சூரியனால் விழுங்கபடும். இது நடக்க சுமார் 400 கோடி ஆண்டுகள் ஆகும். ஆனால் இன்னும் ஒரு நூற்றாண்டில் மனிதன் வேறு கிரகத்து குடிபெயர்ந்து விடுவான். கிரகம் விட்டு கிரகம் தாவி மனிதன் தன் இனத்தை காப்பாற்றி கொள்வான்.
 
உண்ணும்போது உயிரெழுத்தை உயரவாங்கு
உறங்குகின்ற போதெல்லாம் அதிவேயாகும்
பெண்ணின்பால் இந்திரியம் விடும்போதும் அதுவே ஐயா.

இடங்கலை- மின்புலம்
பிங்கலை- காந்தபுலம்
சுழிமுனை- மின்காந்த சக்தி

சுழிமுனை மூச்சென்பது நெற்றியில் இருநாடிகளும் சிறு துடிப்புகளாக தெரிவதே.

மேஜிக் என்பது அதிவேக அசைவுகளினால் திறம்பட செய்வது. அதாவது குறிப்பட்ட வேகத்தை மட்டுமே கண்களால் பார்க்க முடியும். அதிவேக செயல்பாடு மூளையால் கணிக்க முடியாதது.  நாம் தொடர்ந்து மூச்சையே கவனிக்கும் போது ஒருகட்டத்தில் சுவாசம் நின்று சுழிமுனையில் நுண்ணிய துடிப்புகளாக மாறும். இது ஆரம்பத்தில் ஒரு நொடி பிறகு 2 3 4 என அதிகரித்து கொண்டே செல்லும். அந்த கால இடைவெளிதான் நிர்விகல்ப சமாதி.

கீரைக்கு இணையான சத்துக்கள் எந்த அசைவத்திலும் இல்லை. புலால் உண்பதால் இரைப்பைக்கு உணவு சென்ற பின்னும் பாக்டீரியாக்கள் பெருகி ரத்தத்தில் கலந்து மனதில் ஆக்ரோஷ எண்ணங்களை தூண்டுகிறது.

ஏன்சியன்ட் ஏலியன்ஸ் நிகழ்ச்சியை நன்கு கவனித்தால் அவர்கள் எதையும் முடிவாக சொல்லாததை கவனிக்கலாம். ஆனால் நானும் அதனை மறுக்கவில்லை. பிரபஞ்சம் பிரமாண்டமானது. வேற்று கிரகங்களில் உயிரணங்கள் வாழ ஏராமான சூழ்நிலைகள் உள்ளது. முடிவில்லா பிரபஞ்சம் என சொல்வது தவறு. அதற்கும் எல்லை உண்டு. ஆனால் அது நொடிக்கு நொடி விரிவடைந்து கொண்டே இருக்கிறது. தீப ஒளி தியானம், தொடர்ந்து கண்சிமிட்டாமல் தீப ஒளியை பார்த்துவிட்டு மெல்ல கண் மூடினால் உள்ளே அந்த பிம்பம் சிறிது நேரம் தெரியும். 
முடிந்தளவு அதையே பார்க்க முயலுங்கள். சில நொடிகளில் அந்த ஒளி பக்கவாட்டில் சென்று மறைந்துவிடும். மீண்டும் கண்ணை திறந்து தீபத்தை பாருங்கள். மறுபடியும் கண்ணை மூடி வழக்கம்போல செய்யுங்கள். இதை தொடர்ந்து செய்து வர மனக்கண்ணில் ஒளி தெரியும் அந்த கால இடைவெளி அதிகரிக்கும்.

 அந்த கால இடைவெளிதான் மன ஒருமைபட்ட நிலை. சாமி ஆடுவது என்பது வேகமாக குண்டலினி ஏறி இறங்கும் ஒரு செயல்பாடு. நாம் மிகவும் உணர்ச்சி வசப்படும்போது நம்மை அறியாமல் குண்டலினி வேலையை காட்டும். அதை அணுவளவும் எதிர்பார்காத உடலும் மனமும் பயந்து ஆடத் தொடங்குகிறோம். ஆனால் யோகிகள் இதை தானாக ஏற்றுவதால் பயம் இல்லாமல் அதை எதிர்கொள்வர். பேயை அதிகம் நம்புவது பெண்கள்தானே! அதனால் அவர்கள் பேயின் அலைவரிசையில் தொடர்பு கொள்ள முடிகிறது. நீங்களும் நம்பிபாருங்கள் பிறகு தெரியும்.
பிரபஞ்சத்தில் பதிந்த நமது எண்ணங்களை தொடர்பு கொள்ளும் மீடியம் தான் மூளை. அந்த எண்ணங்களின் வலிமையால் வேறு ஒருவரின் மூளையை கூட மீடியமாக தேர்ந்தெடுக்க முடியும். அதுதான் கூடுவிட்டு கூடு பாய்தல். பத்து நாட்களாக மருத்துவமனையில் படுத்துகிடந்தவர் எழுந்து சாமி அழைப்பதாக சொல்விட்டு சாக காரணம் அவருக்கு கருப்புசாமி என்கிற உருவத்தின்மீது அதீத நம்பிக்கை இருந்ததால் அவரது ஆழ்மனம் அவர் எண்ணங்களுக்கு செயல்வடிவம் கொடுத்தது. அவரின் இன்றே இறந்து விடுவோம் என்ற ஆழ்மன நம்பிக்கைதான் அவரை கொன்றது. 

நம் மூளையின் ஒரு பகுதி உணர்ந்த்தை சில மைக்ரோ வினாடிக்கு பிறகுதான் நினைவு மனம் உணர்கிறது. இந்த கால இடைவெளிதான் ஏற்கனவே நடந்ததாக சந்தேகிக்க வைக்கிறது. மூளை என்பது மீடியம். மனம் என்பது பிரபஞ்ச அணுக்களில் பதிந்திருக்கும் நம் எண்ணங்கள். மூளை என்கிற மீடியம் மனதை தொடர்பு கொள்ளாமல் இருப்பதே சமாதி நிலை…

No comments:

Post a Comment